தமிழனுக்கு பெருமை சேர்த்து தந்த A.R. ரஃமான்


இந்தியாவில் பிறந்து,சிறு வயதிலிருந்தே keyboard இசையை கற்று,1992ம் ஆண்டில் தமிழில்
"ரோஜா" படத்தில் முதல் முதலாக தனது இசைப்பயணத்தை தொடக்கி வைத்தது மட்டுமல்லாது
தனது முதல் படத்திலேயே உலகுவாழ் தமிழ் மக்களின் மனதிலே இசையால் குடிகொண்டார்.
"ரோஜா" படத்தில் "சின்ன சின்ன ஆசை" என்ற பாடலை இசையமைத்ததிலிருந்தே மக்கள் அனைவரின் மனதிலும்
பெரிய பெரிய சந்தோசத்தை ஏற்படுத்தியது.அதைத் தொடர்ந்து இவர் இசையமைத்த அனைத்து பாடல்களும்
பெரும் வெற்றியை குவித்து கொண்டே இருந்தன.இவரின் பாடல்களை உயர்ந்தது இது,தாழ்ந்தது என்று தரம் பிரிக்கவே முடியாது.
ஓவ்வொரு பாடல்களும் மனதுக்கும்,செவுக்கும் இனிமையை தந்தது மட்டுமல்லாது,பாடும்போது கற்கண்டு போன்று நாவுக்கும் ருசியை தந்தது.
இவர் ஒரு பொழுதும் தனது திறமையை ஒப்பு கொண்டதில்லை.எப்பொழுது பெரும் வெற்றியை அடையும்போதும் இவர் சொல்லும்
ஒரே வார்த்தை "எல்லாப்புகழும் இறைவனுக்கே".
இவரின் தனித்திறமையை ஒரு பக்கம் வைத்து விட்டு,இவரின் தனிப்பட்ட குணாதிசயங்களை பார்த்தால்......சொல்லவே வேண்டாம்...அவ்வளவு தன்னடக்கம்....அவ்வளவு மரியாதை பெரியோர்களிடத்தில்...
இந்த உலகத்தில் எவ்வளவோ பேர் ஒரு நாள் தாங்கள் இருக்கும் நிலையில் இருந்து ஒரு படி மேலே போய் விட்டாலே யாரையுமே மதிக்க மாட்டார்கள்,ஏன் தங்களுக்கு அந்த முன்னேற்றத்து கை கொடுத்தவனை
கூட மறந்து விடுவார்கள்.அதற்குப்பிறகு அவர்கள் சொர்க்கத்தில் இருப்பதாக நினைத்து அவர்களுக்கு கீழ் இருப்பவர்கள் எல்லாம் தங்களது பாதணிகளாகவே நினைப்பார்கள்.
ஆனால் ரஃமான், அவர் எவ்வளவோ சாதனைகளை எட்டியபோதும் மாதா,பிதா,குரு,தெய்வம் என்ற அனைவரையும் மதித்து கொண்டே இருக்கிறார்,தானும் சாதாரண ஒரு மனிதன் என்று தனது அனைத்து செயல்களிலும் நிரூபித்து கொண்டே இருக்கிறார்.
அந்த தன்னடக்கம்தான் இன்று அவரை OSCAR வரைக்கும் கொண்டு நிறுத்தி விட்டது.அமெரிக்கா சென்று "slumdog millionaire" என்ற படத்தில் இசையமைத்தமைக்காக இவருக்கு இரண்டு Awards கிடைக்கப்பெற்றது.
அமெரிக்கா சென்று OSCAR வாங்கிய முதல் தமிழன் என்ற பெருமையை தனது குடும்பத்துக்கு மட்டுமல்லாது,உலகவாழ் தமிழ் மக்கள் அனைவருக்குமே எடுத்து கொடுத்து இருக்கிறார்.
"மகன் தந்தைக்காற்றும் உதவி இவன் தந்தை என்னோற்றான் கொல் எனும் சொல்" என்பதை தனது வெற்றிகளின் மூலம் எடுத்து காட்டிவிட்டார்.
வாழ்ந்தால் இவர் போல் வாழவேண்டும் என்ற ஆசையை அல்லது வெறியை எல்லார் மனதிலும் ஏற்படுத்தி விட்டார்.

No comments: